.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, November 3, 2012

உம்மன் 'சாண்டி' & 'நீலம்' சஞ்சீவரெட்டி : புயலானது எப்படி..?!



லில்லி, இசபெல், கேத்ரீனா, ஐரின், ரீட்டா... இதுபோன்ற அமெரிக்க புயல் பெயர்களை செய்திகளில் கேட்டுக்கேட்டு, 'ஏன் இப்படி புயலுக்கு பெண்கள் பெயர் வைக்கிறார்கள்' என்று யோசித்து அதுபற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம்... அந்த புயலால் விளைந்த நாசத்தினால் உண்டான சோகத்தினால் பின்னர் அறவே மறந்துவிடும்.

இறுதித் தூதரின் ஹஜ் பேருரை


அழகிய படைப்பாளனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ் கூறுகிறான்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்று சவுதி அரேபியா ரியாத்தில் நடந்த கோரா விபத்து. 14 பேர் மரணம். 50 பேருக்கு மேல் காயம். (படங்கள் இணைப்பு)




சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் மிகபெரிய விபத்து 14 பேர் மரணம், 50 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது  எனவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.
கண்டனர் ட்ரைலர் குரைசி ரோட்டில் வரும்பொழுது எதிர்பாராத விதமாக 50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
கீழே போய்க்கொண்டு இருந்த கார்கள் மீது விழுந்ததில் தற்போதைய நிலபரப்படி 14 பேர் இறந்து இருக்கிறார்கள்
50 பேர்க்குமேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் இதன் எதிரொலியாக அந்த கண்டனர் வெடித்து சிதறியதில் குறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம் பாதிப்பு அடைந்து உள்ளது.

Friday, November 2, 2012

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!


                                     ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

மழை காலமும், மார்க்கம் சொல்லும் வழிமுறைகளும்.

‘வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்து கிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா? (அல்குர்ஆன் 32:27)
தற்போது உலகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் பல இடங்களில் புயல் காற்று, மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, புவி அதிர்வு, கடல் கொந்தளிப்பு போன்றவையும் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுவதுடன், வீடு வாசல்களையும் இழந்து தவிக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் இறைவனை நிந்திப்பதையும், வாயார வசைபாடுவதையும் கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.

வாசுதேவநல்லூர் கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2012





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை  நிறைவேற்றினர்.

Thursday, November 1, 2012

வேப்பிலை, எலுமிச்சம் பழத்தால் ஓடும் அரசு பேருந்து!


ஆலங்குடி: ஆவி பயத்தால் புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸுக்கு வேப்பிலை கட்டி ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து, ஆலங்குடி வழியாக கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி வரை, அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், ஆவிகள், பேய்கள் நடமாட்டம் உள்ளதாகக் கூறப்படும், திருவரங்குளம் ஆர்.எஸ்.பதி காடு, கொத்தமங்கலம், மேற்பனைகாடு, காவிரியாறு பாலம் வழியாகச் செல்கிறது. இந்த வழியாகச் செல்லும் போது, பஸ் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன், மேற்பனைகாடு காவிரியாறு பாலத்தில் பைக்கில் சென்றவர்கள் மீது இந்த பஸ் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். காட்டுப்பகுதியில் செல்லும்போது, இந்த பஸ் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். இரவு நேரங்களில் பெரும்பாலும் சில பயணிகளுடன் டிரைவர், கண்டக்டர் மட்டுமே தனியாக வரும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் பஸ் பழுதாகி நிற்பதால், இந்த பஸ்சில் பயணிக்க பயணிகள் பயப்படுகின்றனர். மேலும், டிரைவர், கண்டக்டர்களும் இந்த பஸ்சில் பணி செய்ய தயங்குகின்றனர். இந்த பஸ்சில், "ட்யூட்டி' பார்க்க பெரும்பாலான டிரைவர், கண்டக்டர்கள் தயங்குவதுடன், தங்களை வேறு பஸ்சுக்கு மாற்றித்தரும்படி கூறுகின்றனர். ஆனால், கோட்ட மேலாளர்கள் எச்சரிக்கையை தொடர்ந்து பயந்து கொண்டே வேலை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த பஸ் டிரைவர், கண்டக்டர்கள் புதுக்கோட்டையில் உள்ள அம்மன்கோவிலில் அபிஷேகம் செய்தனர். கோவிலில் வைத்து வழிபட்ட எலுமிச்சை பழம், வேப்பிலையை பஸ் முன்னால் கட்டி, பஸ்சை ஓட்டி வருகின்றனர். 

பத்திரிக்கை செய்தி:-
25-08-2012

Wednesday, October 31, 2012

சவூதியில் கோரச் சம்பவம் : திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து 25 பேர் பலி


சவூதியில் கோரச் சம்பவம் : திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து 25 பேர் பலி
சவூதி அரேபியா அப்கைக் பகுதியில் உள்ள அயின் பத்ர்  கிரமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார வயர் கிழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.

இதில் 25 பேர் துடிதுடித்து உயிர் இழந்துள்ளனர். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லப்படுகிறது.

அந்த மின்சார வயர் திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்துள்ளது. அருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசு வெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. இதில் கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால் பலர் இறந்தது தெரியவந்துள்ளது
.

பேய் பிசாசு உண்டா


* மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்:

பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.


மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
1- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.

* மழைகாலத்தில் ‘மின்சாரம்’ தாக்காமல் இருக்க என்ன செய்யனும்:

பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.


மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...
1- மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.

Tuesday, October 30, 2012

வல்லரசான அமெரிக்காவில் தண்ணீர், மின்சாரம் இல்லை: பேரிடர் என ஒபாமா அறிவிப்பு


நியூயார்க்: உலகிலேயே மிகவும் வளர்ந்த நாடு, வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில், தற்போது குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இன்டர்நெட் இல்லை, போன் வசதி இல்லை என நிறைய இல்லைகள்.
உலக பெரியண்ணன், போலீஸ் காரர், வல்லரசு என்றெல்லாம் பெரிய பெரிய பெயர்கள் உண்டு அமெரிக்காவுக்கு. மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவை ஒரு புயல் அப்படியே திருப்பி போட்டு விட்டது. சாண்டி என பெயரிடப்பட்டுள்ள சூப்பர் புயல் இந்திய நேரப்படி இன்று காலை 5.42 மணிக்கு நியூஜெர்சி அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். நியூயார்க் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இது ஒரு தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார்.

வாசுதேவநல்லூரில் ரூபாய் 32,220 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர 


கிளை சார்பாக கடந்த 19-8-2012 அன்று 80 நபர்களுக்கு ரூபாய் 32,220 மதிப்பில் 


ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்


நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 15-6-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது..



போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா?



அப்துர் ராஸிக் ரபீக்தீன் B.Com (பொதுச் செயலாளர், SLTJ)
நமது இலங்கை திரு நாட்டில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பதை போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டிருக்காது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவான பொன் எழுத்துக்களால் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசியல் யாப்பில் 10 வது ஷரத்தில் “ ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ சுதந்திரம் இருப்பதுடன் எந்த கொள்கையையோ நம்பிக்கையையோ ஏற்றுக்கொள்வதற்கும் சுதந்திரம் உண்டு. அத்துடன்  சிந்திக்கும் சுதந்திரமும், மன சாட்சியின் சுதந்திரமும், மத சுதந்திரமும் உண்டு” என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாண்டி புயல்-அமெரிக்காவுக்கு வரலாறு காணாத பாதிப்பு!



சாண்டி புயல்-அமெரிக்காவுக்கு வரலாறு காணாத பாதிப்பு!
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்கியுள்ள சாண்டி புயலால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரிபியன் கடல் பகுதியில் உறுவான சாண்டி புயல் அந்த பகுதியிலிருந்து நகர்ந்து அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களையும் தாக்கியுள்ளது. இதனால் இந்த மாகானங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு இதுவரை சந்திக்காத பாதிப்புகளை இப்பகுதி சந்தித்துள்ளது.

கடல் அலைகள் 11 அடி உயரத்துக்கு மேல் எழும்புவதால் மன்ஹாட்டன் உள்ளிட்ட கடலோரப் பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இந்த சூறாவளியால் அமெரிக்கா செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏழை மாணவிக்கு கல்வி உதவி



நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளை சார்பாக 29/06/12 – வெள்ளிக் கிழமை அன்று ஏழை மாணவிக்கு ரூ.2000 கல்வி உதவி வழங்கப்பட்டது

ஆடையணிவதின்ஒழுக்கங்கள்



அல்லாஹ்வின் அருள்
يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) سورة الأعراف
ஆதமுடைய மக்களேஉங்கள் வெட்கத் தலங்களைமறைக்கும் ஆடையையும்அலங்காரத்தையும்உங்களுக்கு அருளியுள்ளோம். (இறைஅச்சம் எனும்ஆடையே சிறந்ததுஅவர்கள் சிந்திப்பதற்காக இதுஅல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
                (அல்குர்ஆன் 7: 26)
 وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) سورة النحل
வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும்போரில் உங்களைக் காக்கும் கவசஉடைகளையும் அவன் ஏற்படுத்தினான்நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன்தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81)

வாசுதேவநல்லூர் கிளையில் தர்பியா


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் 

வாசுதேவநல்லூர் கிளையில் (தலையணை அருவியில்) 

கடந்த 26.12.2010 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் 

புளியங்குடி ஒலி , கடையநல்லூர் உமரி குவைத் தாய்ஃவ் 

ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் கிளையில் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 24-6-2011 அன்று ஏழை பெண்ணிற்கு ரூபாய் 5 ,910 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

வாசுதேவநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் ◌தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 20-08-2012 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.



வாசுதேவநல்லூரில் நோன்பு பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர்கிளையில் கடந்த 10-09-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.