.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, February 23, 2013

* குழந்தைகளின் பேச்சுக்கு செவிகொடுங்கள்...

''பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கிறோம்ல்ல.. தொந்தரவு பண்ணாத..'' 
இப்படி ஒரு டயலாக்கை இன்று வரையிலும் சொல்லாத அம்மாவா நீங்கள்? உங்கள் முதுகில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்து கொள்ளுங்கள்.

''நீங்கள் எவ்வளவு முக்கியமான விஷயத்தை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். அப்போது, குழந்தைகள் உங்களிடம் ஏதாவது சொல்ல வந்தால் ''தொல்லை'' என்று கருதி விரட்டாமல், அவர்களுக்கும் கொஞ்சம் காது கொடுங்கள்.

குழந்தைகளுக்காக நீங்கள் ஒதுக்கும் அந்த சில நிமிட இடைவெளியால் உங்களின் பேச்சுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் வந்து விடாது. ஆனால், உங்களின் இந்தப் புறக்கணிப்பு தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் காது கொடுத்தாலும் உங்களிடம் பேசுவதற்கு உங்கள் குழந்தைகள் தயாராக இருக்க மாட்டார்கள்!'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி.. கூடவே, அப்படி ''தொந்தரவு'' செய்வது குழந்தையைப் பொறுத்தவரையில் எத்தனை நியாயமானது என்பதையும் விளக்குகிறார்.

Tuesday, February 19, 2013

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா?


சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக நேற்று (17.02.2013) நடைபெற்ற ”அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா?”  என்ற தலைப்பில் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் ஆற்றிய உரை. அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய உரை.