.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Saturday, November 24, 2012

விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு.



நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்பரூபம் என்ற திரைப்படத்தை தமிழக்தில் எங்கும் திரையிடவிடமாட்டோம். மீறி திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளுக்கும் எதிர் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவரும் தமிழுலகறிந்த பேச்சாளருமான சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, சகோதர சமுதாயத்தவர் மத்தியில் தீய எண்ணத்தை பரப்ப முயலும் இது போன்ற தீய சக்திகளுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனிமேல் முஸ்லிம்களை சீண்டும் விதமாக யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளில் ஜமாத் ஈடுபட்டிருப்பதாக ஜெய்னுலாப்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வுழுஃ செயல்முறை – விளக்கப் படங்களுடன்.

வுழு செய்யும் முறை முடிந்த வரை புகைப்படங்கள் இணைக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. தொழுகை தொடர்பாக தர்பிய்யாக்கள், பயிற்சி வகுப்பு நடத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தினால் இந்தத் தொகுப்பு வெளியிடப்படுகின்றது. (M.I.Sc)
நிய்யத் எனும் எண்ணம்.
ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது.
ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்; ஆனால் நோன்பு நோற்கும் எண்ணம் அவருக்கு இல்லை; நேரமின்மையின் காரணமாகவோ, மருத்துவர்களின் ஆலோசனைப்படியோ இவ்வாறு இருக்கின்றார் என்றால், நோன்பாளி கடைப்பிடிக்கும் அனைத்தையும் அவர் கடைப்பிடித்த போதும் நோன்பு நோற்கும் எண்ணம் இல்லாததால் அவர் நோன்பு நோற்றவராக மாட்டார்.

ஆணவக்கார ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு!


எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.

இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு   துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

Thursday, November 22, 2012

முற்றுகைப் போராட்டம் வாபஸ்!


முற்றுகைப் போராட்டம் வாபஸ்!
பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் 24.11.2012 அன்று TNTJ அறிவித்த ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். - TNTJ மாநில தலைமையகம்.

Monday, November 19, 2012

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம்!


உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.


பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

Sunday, November 18, 2012

பெண் கல்வியும், பெற்றோரின் நிலையும்.


எனது பிள்ளை டாக்டராக வரவேண்டும். என் பிள்ளை தற்போது பொறியியல் துறையில் படித்துக் கொண்டிருக்கின்றான். எனது தம்பி இன்னும் ஓரிரு மாதத்தில் ஆசிரியராக பட்டம் பெற்றுவிடுவான். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகளை எப்படியாவது ஒரு பட்டதாரியாக ஆக்கிவிட வேண்டும். இது போன்ற வார்த்தைகளை பெற்றோர்கள் அடிக்கடி சொல்வதை நாம் தினமும் கேட்டு வருகின்றோம்.
காரணம் தங்கள் பிள்ளைகளை சமுதாயத்தில் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற அவாதான் இவர்களை இப்படி பேசவும், அதற்காக பாடுபடவும் தூண்டுகின்றது. இதே நேரம் கல்விக்காக எதையும் செய்யத் துணியும் பெற்றோர் தனது பிள்ளை ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியைத் தான் பெற்றுக் கொள்கின்றானா என்பதை கவணிக்க தவறிவிடுவதுதான் கவலைக்குறிய விஷயமாகும்.