.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, February 13, 2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு!


இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதனை காரைக்கால் சகோதரியின் அகால மரணம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 


பாதிக்கப்பட்டவனுக்கு தான் வலி தெரியும். இதனால் தான் மனிதனிக்கேற்ற மார்க்கமான இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் இடத்தில் நின்று பார்க்க சொல்கிறது.

Tuesday, February 12, 2013

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!


அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சமபவங்கள் அரங்கேறி வருகின்றன.
வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிக்கையாளர்:
டெல்லியில் உள்ள பிரபல பத்திரிக்கையாளர் இப்திகார் ஜிலானியின் வீட்டை டெல்லி போலீசார் சுற்றி வளைத்து அவரை வீட்டுக்காவலில் அடைத்து நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து(?) வருகின்றார்கள்.
பாராளுமன்றம் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான இப்திகார் ஜிலானியின் வீட்டுக்கு சென்ற டெல்லி போலீசார், ஜிலானி வீட்டை விட்டு வெளியே போக முடியாதபடி அவரை தடுத்து நிறுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் கவுன்சிலிங் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜுவிடம் ஜிலானி புகார் தெரிவித்தார். தனது குடும்பத்தை சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் டெல்லி போலீசார் அவமதித்து வேதனைப்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார்.

நாளைய சிந்தனை...!


எதிர்காலச் சிந்தனை எல்லா மனிதரிடத்தும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். படித்தவனோ, பாமரனோ, பணக்காரனோ, ஏழையோ எல்லோருக்குள்ளும் ஓர் கனவு இருக்கிறது. அதை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும் மனிதர்களிடத்தில் காண்கிறோம்...


ஆனால் இந்த எதிர்காலச் சிந்தனை என்பது இவ்வுலக பலாபலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அதற்குண்டான தயாரிப்புகளிலேயே பலர் மோகம் கொண்டிருப்பதையும், மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். 

முழுவீச்சுடன் செயல்திட்டங்களை வகுப்பதில் பலர் கொண்டிருக்கும் ஆர்வம் இயற்கையான மனித உணர்வு களுக்கும்  உறவுகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதை சமயங்களில் நாம் காணலாம். இது நாளடைவில் நம்முள் இறைவன் வைத்திருக்கும் மனித மாண்புகளை குழிதோண்டிப் புதைத்துவிடுமோ என்ற அச்சம் நம்முள் எழாமலில்லை.