.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Thursday, January 10, 2013

சாபத்தை பெற்றுத்தரும் மவ்லிதுகளும்! அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்தும்!!


கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...

நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்! 

Monday, January 7, 2013

டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் - தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு என்ன?


மனைவியை நேசிப்போம்


கண்ணியத்துக்குரிய அல்லாஹூதஆலா தன் திருமறையில்:

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துனைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:21)

அல்லாஹூதஆலா மனித சமுதாயத்தில் பல உறவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.அத்தகைய உறவுகளில் மிக முக்கியமான உறவாக, குடும்பத்தில் பாலமாக இருக்கக் கூடிய உறவாக கணவன் மனைவி உறவு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இன்றைய நவீன உலகில், இப்பேர்ப்பட்ட உன்னதான உறவுக்கு இடையில் பிரச்னைகளும், சச்சரவுகளும் ஏற்படுவதையும், அதனால் அந்த இருவருக்கிடையே பிரிவுகள் ஏற்படுவதையும் கண்டு வருகிறோம். இப்படிப்பட்ட நிலைகளில் ஆண்களுக்கு பாதிப்பு உண்டு என்றாலும் அதிகம் பாதிப்புள்ளாக்காவது மனைவிமார்கள்.