.label-size
"" அஸ்ஸலாமு அலைக்கும். "தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! -- (அல்குர் ஆன்) ""

Wednesday, October 31, 2012

சவூதியில் கோரச் சம்பவம் : திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து 25 பேர் பலி


சவூதியில் கோரச் சம்பவம் : திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து 25 பேர் பலி
சவூதி அரேபியா அப்கைக் பகுதியில் உள்ள அயின் பத்ர்  கிரமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண்டபத்திற்குள் சென்ற உயர் அழுத்த மின்சார வயர் கிழே விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.

இதில் 25 பேர் துடிதுடித்து உயிர் இழந்துள்ளனர். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லப்படுகிறது.

அந்த மின்சார வயர் திருமண மண்டபத்தின் வாயிலில் உள்ள ஒரு இரும்பு கதவின் மீது விழுந்துள்ளது. அருகில் நின்றவர்கள் அந்த கதவைத் தொட்டதும் பட்டாசு வெடித்தது போன்று படபடவென சத்தம் எழுந்தது. இதில் கதவு வழியாக மின்சாரம் பாய்ந்ததால் பலர் இறந்தது தெரியவந்துள்ளது
.

No comments:

Post a Comment