முஸ்லீம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அயோக்கியத்தனம்! ஆர்ப்பரித்து எழுந்தது டிஎன்டிஜே!!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, July 4, 2012, 21:42


திருமண தினத்தன்று காலை 10.20 மணியளவில் ஆர்.டி.ஓ பேச்சியம்மாள் தலைமையில் மண்டபத்தினுள் புகுந்த காவல்துறையினர் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி மணமகன், மணமகள், மணமகனின் பெற்றோர்கள், மணமகளின் பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துச் சென்றனர்.
ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், இது மாவட்ட கலக்டருடைய உத்தரவு. மாவட்ட கலக்டர் இதற்கு முன்பு இது போன்ற சட்டத்துக்கு முரணாக நடத்தப்பட்ட 99 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் தடுத்து நிறுத்தும் 100வது திருமணம் என்று பீற்றிச் சென்றுள்ளனர்.
மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் இணைந்து பரிபூரண சம்மதத்துடன் நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்களாக மூக்கை நுழைத்து, “மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது; எனவே இது குழந்தைத் திருமணம்” என்று சட்டம் பேசி, இந்தத் திருமணத்தை அநியாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறையினருக்கும், இந்த ஆர்.டி.ஓ.விற்கும், மெத்தப்படித்த மேதாவியாக உள்ள கலெக்டருக்கும் முஸ்லிம்களுக்கென்று இந்தியத் திருநாட்டில் தனியாக, “முஸ்லிம் பெர்சனல் லா” (முஸ்லிம் தனியார் சட்டம்) என்று ஒன்று உள்ளது என்பது தெரியாதா? இது கூடத் தெரியாமலா இந்தக் கூமுட்டைகள் பதவியில் அமர்ந்தார்கள். அதிலும் இந்தக் கைது உத்தரவை பிறப்பித்த மாவட்டக் கலெக்டர், “தரேஸ் அஹ்மது” என்பவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடிய கலக்டருக்கே முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் இருப்பது தெரியவில்லை என்றால் இவர் உண்மையாகவே கலெக்டருக்கு படித்து இந்த பொறுப்பில் வந்தாரா? அல்லது கள்ளத்தனம் செய்து கொல்லைப் புறமாக இந்தப் பொறுப்பிற்கு வந்தாரா? என்று தெரியவில்லை.
ஏன் திருமணத்தை நிறுத்துகின்றீர்கள் என்று காரணம் கேட்டதற்கு சமூக நலத்துறையிலிருந்து புகார் வந்துள்ளது. நீங்கள் நடத்தும் இந்தத் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது. இது இந்திய அரசியல் அமைப்பு சாசனச் சட்டப்படி குற்றம். எனவே உங்களைக் கைது செய்கின்றோம் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், இது மாவட்ட கலக்டருடைய உத்தரவு. மாவட்ட கலக்டர் இதற்கு முன்பு இது போன்ற சட்டத்துக்கு முரணாக நடத்தப்பட்ட 99 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இது அவர் தடுத்து நிறுத்தும் 100வது திருமணம் என்று பீற்றிச் சென்றுள்ளனர்.
மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் இணைந்து பரிபூரண சம்மதத்துடன் நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்களாக மூக்கை நுழைத்து, “மணமகளுக்கு 16 வயதுதான் ஆகின்றது; எனவே இது குழந்தைத் திருமணம்” என்று சட்டம் பேசி, இந்தத் திருமணத்தை அநியாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறையினருக்கும், இந்த ஆர்.டி.ஓ.விற்கும், மெத்தப்படித்த மேதாவியாக உள்ள கலெக்டருக்கும் முஸ்லிம்களுக்கென்று இந்தியத் திருநாட்டில் தனியாக, “முஸ்லிம் பெர்சனல் லா” (முஸ்லிம் தனியார் சட்டம்) என்று ஒன்று உள்ளது என்பது தெரியாதா? இது கூடத் தெரியாமலா இந்தக் கூமுட்டைகள் பதவியில் அமர்ந்தார்கள். அதிலும் இந்தக் கைது உத்தரவை பிறப்பித்த மாவட்டக் கலெக்டர், “தரேஸ் அஹ்மது” என்பவர் ஒரு முஸ்லிம் என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஒரு முஸ்லிமாக இருக்கக்கூடிய கலக்டருக்கே முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் இருப்பது தெரியவில்லை என்றால் இவர் உண்மையாகவே கலெக்டருக்கு படித்து இந்த பொறுப்பில் வந்தாரா? அல்லது கள்ளத்தனம் செய்து கொல்லைப் புறமாக இந்தப் பொறுப்பிற்கு வந்தாரா? என்று தெரியவில்லை.
களமிறங்கிய டிஎன்டிஜே :
மணமகன், மணமகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்லப்பட்டவுடனேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுன்னத்வல் ஜமாஅத்தினராக இருந்த போதிலும், இந்த விஷயத்தில் நியாயம் கேட்டு நமது உரிமையைப் பெற்றுத்தர ஏற்ற இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான். அவர்களிடத்தில் சென்றால்தான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக டிஎன்டிஜே வின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி அவர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களைக் கூறி முறையிட்டுள்ளனர்.
மணமகன், மணமகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அழைத்துச் செல்லப்பட்டவுடனேயே பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுன்னத்வல் ஜமாஅத்தினராக இருந்த போதிலும், இந்த விஷயத்தில் நியாயம் கேட்டு நமது உரிமையைப் பெற்றுத்தர ஏற்ற இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான். அவர்களிடத்தில் சென்றால்தான் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக டிஎன்டிஜே வின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி அவர்களைத் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களைக் கூறி முறையிட்டுள்ளனர்.
அதிரடியாக களத்தில் இறங்கிய மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடனடியாக கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர், ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையின் இந்த அநியாயத்தையும், அடாவடித்தனத்தையும் தட்டிக்கேட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, “15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண்கள் தாங்கள் விரும்பியவரைத் திருமணம் முடிக்கலாம். அதற்கு முஸ்லிம் தனியார் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தவறில்லை” என்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நமது உணர்வு இதழில் வெளியான செய்தியை அவர்களிடத்தில் காண்பித்து, சட்டப்படி நடைபெறும் ஒரு திருமணத்தை, பெண் வீட்டார் மற்றும் பெண்ணின் சம்மதத்துடன் நடைபெறும் இந்தத் திருமணத்தை தாங்கள் தடுத்து நிறுத்தியிருப்பது முஸ்லிம்களின் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் தலையிட்டு எங்களது உரிமைகளைப் பறித்துள்ள இந்தச் செயலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்; இந்த அடாவடித்தனத்தைச் செய்த அதிகாரிகளை சும்மா விடமாட்டோம். இதில் தாங்கள் எடுத்த நடவடிக்கையை திரும்பப் பெறவில்லையானால் இது தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாகும் என்ற எச்சரிக்கையையும் நமது நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில், விடுத்துள்ளனர்.
நமது நிர்வாகிகள் கூறிய செய்திகளையும், உணர்வு இதழையும் பார்த்த அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கதிகலங்கிய அதிகாரவர்க்கம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பெற்றோர்கள் அனைவரையும் விடுவித்தனர். அவர்கள் மீது எந்த வழக்குகளும் போடாமல் நாங்கள் திருப்பி அனுப்பி விடுகின்றோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
அதற்கிடையில், 100வது திருமணத்தை நிறுத்தி சதமடிக்கும் கலெக்டரின் சாதனையை தவ்ஹீத் ஜமாஅத் முறியடித்து விட்டால், மாவட்ட கலெக்டரின் பிரஸ்டீஜ் என்னவாகுமோ என்று பதறிய அவர்கள் மணமகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, மணப்பெண்ணை திருச்சியிலுள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடத்தில், முஸ்லிம் பெண்கள் பருவமடைந்து விட்டாலே திருமணம் முடிக்கலாம் என்று முஸ்லிம்களுக்கு என்று தனிச்சட்டம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் 15 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு திருமணம் முடித்தது செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, 15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் அவர் விரும்பியவரை மணமுடிக்கலாம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என்று நமது நிர்வாகிகள் கூறியதற்கு, அந்த ஊரிலுள்ள காவல்துறை ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும், “அந்தத் தீர்ப்பு டெல்லிக்குத்தான் செல்லுபடியாகும். தமிழகத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது. தமிழகத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் இது போன்ற தீர்ப்பு கொடுத்தால்தான் அது தமிழகத்தைக் கட்டுப் படுத்தும்” என்று கூறுகெட்டத் தனமாக கூறியுள்ளனர்.
உடனே நமது நிர்வாகிகள் அதிகாரிகளிடத்தில், “நீங்கள் கூறுவதை எழுத்துப்பூர்வமாக எழுதித் தாருங்கள். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியதும், அதை எல்லாம் எழுதித்தர முடியாது என்று மழுப்பிவிட்டனர்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டம் உள்ளது என்ற அடிப்படை அறிவும் இவர்களுக்கு இல்லை; இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்தும்; அதற்குக் கீழுள்ள கோர்ட்டுகளையும் கட்டுப்படுத்தும். அந்தத் தீர்ப்புகளும் சட்ட அங்கீகாரத்திற்குள் வந்துவிடும்” என்ற அடிப்படை அறிவும் கூட இவர்களுக்கு இல்லை என்பது எப்படிப்பட்ட கூறுகெட்ட மூளையற்றவர்க ளெல்லாம் அதிகாரமட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று.
இவ்வளவுக்கும் பிறகு நமது நிர்வாகிகளிடத்தில் அந்த மூளை வெந்த அதிகாரிகள் அப்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருக்குமேயானால் அதனுடைய நகலை எங்களுக்குக் கொடுங்கள் என்று கூறி அசடு வழிந்துள்ளனர்.
இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்தால் கூடிய விரைவில்(?) இந்தியா வல்லரசாகிவிடும் :
டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய பிறகு ஏன் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை நம்மிடம் கேட்க வேண்டும். அது மட்டுமல்லாமல், டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து மீடியாக்களிலும் பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது. அனைத்து முன்னணி செய்தி தொலைக் காட்சிகளும், பத்திரிக் கைகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் இவர்களுக்கு நாட்டு நடப்பும் தெரியவில்லை என்பது பளிச்சென்று தெரியவருகின்றது. இந்த லட்சணத்தில்தான் கலெக்டரும், ஆர்.டி.ஓ.வும், சமூக நலத்துறையும், காவல்துறை அதிகாரிகளும் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை(?) நமக்கு வலுப் பெறுகின்றது.
அவர்கள் அந்தத் தீர்ப்பின் நகல் நம்மிடம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ நமக்குத் தெரியவில்லை. இப்படித் தீர்ப்பு நகல் நம்மிடம் இல்லை என்றால் அதை வைத்தே காய் நகர்த்தலாம் என்ற சதித்திடமாகத்தான் இது இருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். இல்லையென்றால் தீர்ப்பின் நகலை நம்மிடம் கேட்க எந்த அவசியமும் இல்லை.
அவர்கள் கேட்ட மறுகணமே மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நகலைக் கேட்டவுடனேயே, தயாராக வைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நகல் மாவட்டத்திற்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட, அதை நமது மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அனைவரிடத்திலும் வழங்க, நாம்தான் தவறான வேலையை செய்துவிட்டோமோ என்று அவர்களுக்கு அப்போதுதான் பொரி தட்டியுள்ளது.
(குறிப்பு : டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு நமது ஜமாஅத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, “15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண்கள் தாங்கள் விரும்பியவரைத் திருமணம் முடிக்கலாம். அதற்கு முஸ்லிம் தனியார் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தவறில்லை” என்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி நமது உணர்வு இதழில் வெளியான செய்தியை அவர்களிடத்தில் காண்பித்து, சட்டப்படி நடைபெறும் ஒரு திருமணத்தை, பெண் வீட்டார் மற்றும் பெண்ணின் சம்மதத்துடன் நடைபெறும் இந்தத் திருமணத்தை தாங்கள் தடுத்து நிறுத்தியிருப்பது முஸ்லிம்களின் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் தலையிட்டு எங்களது உரிமைகளைப் பறித்துள்ள இந்தச் செயலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்; இந்த அடாவடித்தனத்தைச் செய்த அதிகாரிகளை சும்மா விடமாட்டோம். இதில் தாங்கள் எடுத்த நடவடிக்கையை திரும்பப் பெறவில்லையானால் இது தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய பிரச்சனையாகும் என்ற எச்சரிக்கையையும் நமது நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில், விடுத்துள்ளனர்.
நமது நிர்வாகிகள் கூறிய செய்திகளையும், உணர்வு இதழையும் பார்த்த அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கதிகலங்கிய அதிகாரவர்க்கம் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பெற்றோர்கள் அனைவரையும் விடுவித்தனர். அவர்கள் மீது எந்த வழக்குகளும் போடாமல் நாங்கள் திருப்பி அனுப்பி விடுகின்றோம் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.
அதற்கிடையில், 100வது திருமணத்தை நிறுத்தி சதமடிக்கும் கலெக்டரின் சாதனையை தவ்ஹீத் ஜமாஅத் முறியடித்து விட்டால், மாவட்ட கலெக்டரின் பிரஸ்டீஜ் என்னவாகுமோ என்று பதறிய அவர்கள் மணமகன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, மணப்பெண்ணை திருச்சியிலுள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடத்தில், முஸ்லிம் பெண்கள் பருவமடைந்து விட்டாலே திருமணம் முடிக்கலாம் என்று முஸ்லிம்களுக்கு என்று தனிச்சட்டம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் 15 வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கு திருமணம் முடித்தது செல்லாது என்று அறிவிக்கச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, 15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் அவர் விரும்பியவரை மணமுடிக்கலாம் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என்று நமது நிர்வாகிகள் கூறியதற்கு, அந்த ஊரிலுள்ள காவல்துறை ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும், “அந்தத் தீர்ப்பு டெல்லிக்குத்தான் செல்லுபடியாகும். தமிழகத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது. தமிழகத்திலுள்ள உயர்நீதிமன்றத்தில் இது போன்ற தீர்ப்பு கொடுத்தால்தான் அது தமிழகத்தைக் கட்டுப் படுத்தும்” என்று கூறுகெட்டத் தனமாக கூறியுள்ளனர்.
உடனே நமது நிர்வாகிகள் அதிகாரிகளிடத்தில், “நீங்கள் கூறுவதை எழுத்துப்பூர்வமாக எழுதித் தாருங்கள். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியதும், அதை எல்லாம் எழுதித்தர முடியாது என்று மழுப்பிவிட்டனர்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டம் உள்ளது என்ற அடிப்படை அறிவும் இவர்களுக்கு இல்லை; இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்தும்; அதற்குக் கீழுள்ள கோர்ட்டுகளையும் கட்டுப்படுத்தும். அந்தத் தீர்ப்புகளும் சட்ட அங்கீகாரத்திற்குள் வந்துவிடும்” என்ற அடிப்படை அறிவும் கூட இவர்களுக்கு இல்லை என்பது எப்படிப்பட்ட கூறுகெட்ட மூளையற்றவர்க ளெல்லாம் அதிகாரமட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கு நல்ல சான்று.
இவ்வளவுக்கும் பிறகு நமது நிர்வாகிகளிடத்தில் அந்த மூளை வெந்த அதிகாரிகள் அப்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருக்குமேயானால் அதனுடைய நகலை எங்களுக்குக் கொடுங்கள் என்று கூறி அசடு வழிந்துள்ளனர்.
இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்தால் கூடிய விரைவில்(?) இந்தியா வல்லரசாகிவிடும் :
டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தமிழகத்தைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய பிறகு ஏன் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை நம்மிடம் கேட்க வேண்டும். அது மட்டுமல்லாமல், டெல்லி உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து மீடியாக்களிலும் பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது. அனைத்து முன்னணி செய்தி தொலைக் காட்சிகளும், பத்திரிக் கைகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் இவர்களுக்கு நாட்டு நடப்பும் தெரியவில்லை என்பது பளிச்சென்று தெரியவருகின்றது. இந்த லட்சணத்தில்தான் கலெக்டரும், ஆர்.டி.ஓ.வும், சமூக நலத்துறையும், காவல்துறை அதிகாரிகளும் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை(?) நமக்கு வலுப் பெறுகின்றது.
அவர்கள் அந்தத் தீர்ப்பின் நகல் நம்மிடம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ நமக்குத் தெரியவில்லை. இப்படித் தீர்ப்பு நகல் நம்மிடம் இல்லை என்றால் அதை வைத்தே காய் நகர்த்தலாம் என்ற சதித்திடமாகத்தான் இது இருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். இல்லையென்றால் தீர்ப்பின் நகலை நம்மிடம் கேட்க எந்த அவசியமும் இல்லை.
அவர்கள் கேட்ட மறுகணமே மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நகலைக் கேட்டவுடனேயே, தயாராக வைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு நகல் மாவட்டத்திற்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட, அதை நமது மாவட்ட நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அனைவரிடத்திலும் வழங்க, நாம்தான் தவறான வேலையை செய்துவிட்டோமோ என்று அவர்களுக்கு அப்போதுதான் பொரி தட்டியுள்ளது.
(குறிப்பு : டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு நமது ஜமாஅத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.)
ஆர்ப்பாட்டம் அறிவித்தது டிஎன்டிஜே:
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து, அடாவடித்தனம் செய்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக பதவி நீக்கம் செய்யச் சொல்லியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மறுநாள் 26.06.12 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நடத்தவுள்ளதாக அன்றைய தினமே (25.06.12 அன்று) பெரம்பலூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இவர்களிடத்தில் முறையாக அனுமதி கேட்டாலும் இவர்கள் தரப்போவதில்லை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இந்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் என்பது மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். இங்கு ஏகத்துவ ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவு என்ற போதிலும், இந்த அநியாயத்திற்கு எதிராக நாம் களம் கண்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து நமது சகோதரர்கள் அதிகாரவர்க்கத்தைக் கண்டித்து இந்த அறவழிப்போராட்டத்தில் குதித்தனர்.
முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து முஸ்லிம்களின் உரிமையைப் பறித்து, அடாவடித்தனம் செய்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக பதவி நீக்கம் செய்யச் சொல்லியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மறுநாள் 26.06.12 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4 மணிக்கு நடத்தவுள்ளதாக அன்றைய தினமே (25.06.12 அன்று) பெரம்பலூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இவர்களிடத்தில் முறையாக அனுமதி கேட்டாலும் இவர்கள் தரப்போவதில்லை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே இந்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் என்பது மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும். இங்கு ஏகத்துவ ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவு என்ற போதிலும், இந்த அநியாயத்திற்கு எதிராக நாம் களம் கண்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து நமது சகோதரர்கள் அதிகாரவர்க்கத்தைக் கண்டித்து இந்த அறவழிப்போராட்டத்தில் குதித்தனர்.
மிரட்டல் விடுத்த காவல்துறை :
காவல்துறையையும், மாவட்ட கலெக்டரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் சும்மா விடுவார்களா என்ன? ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த 26.06.12 அன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும் நமது மாவட்டத் தலைவரிடத்தில், “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் உங்களைக் கைது செய்து சிறையிலடைப்போம். இது வரை 99 திருமணங்களை, அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். அவர்களெல்லாம் இது போன்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அவர்களெல்லாம் இந்துக்களைத் திரட்டி எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. உங்களுக்கு மட்டும் என்ன வந்துவிட்டது. நீங்கள் முஸ்லிம்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போகின்றீர்களா?
இந்த போரட்டத்தில் என்ன 1000 பேர் வருவீர்களா? அல்லது 2000 பேர் வருவீர்களா? இல்லை 3000 பேர் வருவீர்களா? எவ்வளவு பேர் வந்தாலும் விடமாட்டோம்” என்று மிரட்டியுள்ளார்.
இவர்கள் காட்டிய பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படாத நமது டிஎன்டிஜே நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளிடத்தில், “இதுவரை நீங்கள் 99 திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதுவெல்லாம் இந்துக்களுடைய திருமணம். அவர்கள் 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் முடிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குற்றம். ஆனால் நாங்கள் முஸ்லிம்கள். எங்களுக்கென்று இந்த நாட்டிலுள்ள உரிமைகளை நாங்கள் விட்டுத்தர மாட்டோம். விட்டுத்தரவும் முடியாது. நீங்கள் என்ன இதைத் தடுப்பது?. நாங்கள் என்ன உங்களிடம் அனுமதி வாங்குவது?. நாங்கள் தடையை மீறித்தான் இந்த போரட்டத்தை நடத்துகின்றோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூற பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு பதிலளித்த மெத்தப்படித்த மேதாவிகள், இதில் இந்து முஸ்லிம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. உயிர் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அதுபோல 18 வயதில் மணம் முடிக்கக் கூடாது என்ற சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்” என்று கூறி வரட்டுத்தத்துவம் பேசியுள்ளனர்.
கலெக்டரை நேரடியாகச் சந்தித்து இது குறித்து விளக்கமளிக்க அனுமதி கேட்ட போது, இந்தப் பிரச்சனை குறித்து அவர் ஆலோசனை செய்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளனர். அப்படியானால் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு பிறகுதான் அவர் செய்த செயல் சரியானது தானா? என்று அவர் ஆய்வு செய்தது அம்பலமானது. ஒரு கலெக்டர் என்பவர் இந்த அளவுக்கா கூறுகெட்டுப்போய் மரை கழன்று திரிகின்றார் என்ற விஷயமும் உறுதியானது.
பேரணியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்:
காவல்துறையையும், மாவட்ட கலெக்டரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் சும்மா விடுவார்களா என்ன? ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த 26.06.12 அன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும் நமது மாவட்டத் தலைவரிடத்தில், “தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் உங்களைக் கைது செய்து சிறையிலடைப்போம். இது வரை 99 திருமணங்களை, அதுவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் முடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். அவர்களெல்லாம் இது போன்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. அவர்களெல்லாம் இந்துக்களைத் திரட்டி எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. உங்களுக்கு மட்டும் என்ன வந்துவிட்டது. நீங்கள் முஸ்லிம்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போகின்றீர்களா?
இந்த போரட்டத்தில் என்ன 1000 பேர் வருவீர்களா? அல்லது 2000 பேர் வருவீர்களா? இல்லை 3000 பேர் வருவீர்களா? எவ்வளவு பேர் வந்தாலும் விடமாட்டோம்” என்று மிரட்டியுள்ளார்.
இவர்கள் காட்டிய பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படாத நமது டிஎன்டிஜே நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளிடத்தில், “இதுவரை நீங்கள் 99 திருமணங்களைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதுவெல்லாம் இந்துக்களுடைய திருமணம். அவர்கள் 18 வயது பூர்த்தியாகாமல் திருமணம் முடிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குற்றம். ஆனால் நாங்கள் முஸ்லிம்கள். எங்களுக்கென்று இந்த நாட்டிலுள்ள உரிமைகளை நாங்கள் விட்டுத்தர மாட்டோம். விட்டுத்தரவும் முடியாது. நீங்கள் என்ன இதைத் தடுப்பது?. நாங்கள் என்ன உங்களிடம் அனுமதி வாங்குவது?. நாங்கள் தடையை மீறித்தான் இந்த போரட்டத்தை நடத்துகின்றோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூற பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு பதிலளித்த மெத்தப்படித்த மேதாவிகள், இதில் இந்து முஸ்லிம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. உயிர் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அதுபோல 18 வயதில் மணம் முடிக்கக் கூடாது என்ற சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்” என்று கூறி வரட்டுத்தத்துவம் பேசியுள்ளனர்.
கலெக்டரை நேரடியாகச் சந்தித்து இது குறித்து விளக்கமளிக்க அனுமதி கேட்ட போது, இந்தப் பிரச்சனை குறித்து அவர் ஆலோசனை செய்து கொண்டுள்ளார் என்று கூறியுள்ளனர். அப்படியானால் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு பிறகுதான் அவர் செய்த செயல் சரியானது தானா? என்று அவர் ஆய்வு செய்தது அம்பலமானது. ஒரு கலெக்டர் என்பவர் இந்த அளவுக்கா கூறுகெட்டுப்போய் மரை கழன்று திரிகின்றார் என்ற விஷயமும் உறுதியானது.
பேரணியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்:
பெரம்பலூர் பழைய பஸ்டாண்ட் அருகிலுள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு சரியாக மாலை 4மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாகவே எப்படியாவது மிரட்டிப்பார்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிடலாம் என்று மிரட்டல் விடுத்த காவல்துறையின் பாச்சா டிஎன்டிஜேவிடம் பழிக்கவில்லை. இருந்தபோதிலும் காவல்துறையினர் விடுவதாக இல்லை.
அதற்கு முன்பாகவே எப்படியாவது மிரட்டிப்பார்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திவிடலாம் என்று மிரட்டல் விடுத்த காவல்துறையின் பாச்சா டிஎன்டிஜேவிடம் பழிக்கவில்லை. இருந்தபோதிலும் காவல்துறையினர் விடுவதாக இல்லை.
போலீஸ் படையைக் குவித்து மிரட்டல்:
ஆர்ப்பாட்ட இடத்தில் போலீஸ் படையை குவித்தனர். ஆர்ப்பாட்ட இடத்தை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்திற்காக நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆம்ப்ளிஃபைர் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ், மற்றும் மைக் செட் ஆகியவற்றை பறிமுதல் செய்து பூச்சாண்டி காட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திலிருந்த இவற்றை பறிமுதல் செய்த விஷயத்தை நமது நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தெரியப்படுத்தியவரை மிரட்டியுள்ளனர். இவ்வளவு அடக்குமுறைகளுக்குப் பிறகும் ஏராளமான மக்கள் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக ஆர்ப்பரித்தவுடன் காவல்துறையினர் செய்வதறியாது தவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் பெரம்பலூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு வரவழைத்து அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பேரணியாக இந்தப் போராட்டம் மாலை 4.45மணிக்கு அஸர் தொழுகைக்கு பிறகு ஆரம்பமானது.
நமது டிஎன்டிஜே மர்கஸிலிருந்து போரட்டக் களம் நோக்கி சாரை சாரையாக வெளியேறிய மக்கள் வெள்ளத்தை நோக்கி காவல்துறையினர் ஓடி வர, டென்சன் எகிறியது.
அனுமதியின்றி தடையை மீறி பேரணி செல்லக்கூடிய நம்மை கைது செய்யத்தான் பேரணி செல்லக் கூடியவர்களை நோக்கி காவல்துறையினர் ஓடி வருகின் றார்கள் என்று நினைத்து கைதாவதற்கு நமது மக்கள் தயாராக இருக்க, ஓடி வந்த காவல்துறையினர் நமது பிரம்மாண்ட பேரணி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்ட ஸ்பாட்டிற்கு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கியதுதான் உச்சகட்ட பரபரப்பு.
கைது செய்ய வருகின்றார்கள் என்று பார்த்தால் பாதுகாப்பு தருவதற்கல்லவா? வந்துள்ளார்கள் என்று ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டக் களம் நோக்கி விரைந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரர்படை.
முந்தைய தினம் 25.06.12 திங்கட்கிழமை அன்றுதான் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மறுநாள் 26.06.12 செவ்வாய்கிழமை மாலை 4மணிக்கு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்யப்பட்டு முழுமையாக 24 மணி நேர அவகாசம் கூட இல்லாத நிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் லெப்பைக்குடிகாடு, புதுஆத்தூர், வி.களத்தூர் என்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் கொள்கைச் சொந்தங்கள் காட்டாற்று வெள்ளம் போல திரண்டதால் பெரம்பலூர் காவல்துறை செய்வதறியாமல் திகைத்தனர்.
விண்ணை முட்டும் கோஷங்களுடன் குறித்த நேரத்தில் போராட்டம் ஆரம்பமானது. காவல்துறை மற்றும் அடாவடி கலெக்டரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பேச்சாளர் தாவூத் கைசர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக கண்டன உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள், மைக்செட், ஆம்ப்ளிஃபைர் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துவிட்ட காரணத்தால் இதை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்த நமது நிர்வாகிகள் தயாராக மெகா ஃபோன்களை வைத்திருந்தனர். அந்த மெகா ஃபோன் வாயிலாக கோஷங்களும், கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டன.
இதைக்கண்ட போலீஸார் “இவர்கள் எதற்கும் தயாராகத்தான் வந்துள்ளார்கள்” என்பதை சூசகமாக உணர்ந்து கொண்டார்கள்.
ஆர்ப்பாட்ட இடத்தில் போலீஸ் படையை குவித்தனர். ஆர்ப்பாட்ட இடத்தை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்திற்காக நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆம்ப்ளிஃபைர் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ், மற்றும் மைக் செட் ஆகியவற்றை பறிமுதல் செய்து பூச்சாண்டி காட்டியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திலிருந்த இவற்றை பறிமுதல் செய்த விஷயத்தை நமது நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தெரியப்படுத்தியவரை மிரட்டியுள்ளனர். இவ்வளவு அடக்குமுறைகளுக்குப் பிறகும் ஏராளமான மக்கள் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக ஆர்ப்பரித்தவுடன் காவல்துறையினர் செய்வதறியாது தவித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் பெரம்பலூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு வரவழைத்து அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பேரணியாக இந்தப் போராட்டம் மாலை 4.45மணிக்கு அஸர் தொழுகைக்கு பிறகு ஆரம்பமானது.
நமது டிஎன்டிஜே மர்கஸிலிருந்து போரட்டக் களம் நோக்கி சாரை சாரையாக வெளியேறிய மக்கள் வெள்ளத்தை நோக்கி காவல்துறையினர் ஓடி வர, டென்சன் எகிறியது.
அனுமதியின்றி தடையை மீறி பேரணி செல்லக்கூடிய நம்மை கைது செய்யத்தான் பேரணி செல்லக் கூடியவர்களை நோக்கி காவல்துறையினர் ஓடி வருகின் றார்கள் என்று நினைத்து கைதாவதற்கு நமது மக்கள் தயாராக இருக்க, ஓடி வந்த காவல்துறையினர் நமது பிரம்மாண்ட பேரணி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்ட ஸ்பாட்டிற்கு செல்வதற்கு பாதுகாப்பு வழங்கியதுதான் உச்சகட்ட பரபரப்பு.
கைது செய்ய வருகின்றார்கள் என்று பார்த்தால் பாதுகாப்பு தருவதற்கல்லவா? வந்துள்ளார்கள் என்று ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டக் களம் நோக்கி விரைந்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரர்படை.
முந்தைய தினம் 25.06.12 திங்கட்கிழமை அன்றுதான் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மறுநாள் 26.06.12 செவ்வாய்கிழமை மாலை 4மணிக்கு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்யப்பட்டு முழுமையாக 24 மணி நேர அவகாசம் கூட இல்லாத நிலையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் லெப்பைக்குடிகாடு, புதுஆத்தூர், வி.களத்தூர் என்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் கொள்கைச் சொந்தங்கள் காட்டாற்று வெள்ளம் போல திரண்டதால் பெரம்பலூர் காவல்துறை செய்வதறியாமல் திகைத்தனர்.
விண்ணை முட்டும் கோஷங்களுடன் குறித்த நேரத்தில் போராட்டம் ஆரம்பமானது. காவல்துறை மற்றும் அடாவடி கலெக்டரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில நிர்வாகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பேச்சாளர் தாவூத் கைசர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். முன்னதாக கண்டன உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள், மைக்செட், ஆம்ப்ளிஃபைர் ஆகியவற்றை காவல்துறை பறிமுதல் செய்துவிட்ட காரணத்தால் இதை ஏற்கனவே எதிர்பார்த்துக் காத்திருந்த நமது நிர்வாகிகள் தயாராக மெகா ஃபோன்களை வைத்திருந்தனர். அந்த மெகா ஃபோன் வாயிலாக கோஷங்களும், கண்டன உரையும் நிகழ்த்தப்பட்டன.
இதைக்கண்ட போலீஸார் “இவர்கள் எதற்கும் தயாராகத்தான் வந்துள்ளார்கள்” என்பதை சூசகமாக உணர்ந்து கொண்டார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய டிஎன்டிஜே:
தாவூத் கைசர் அவர்கள் தனது கண்டன உரையில், இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து சமய மக்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டங்களை இயற்றியுள்ளார்கள். அவரவர் தங்களது மதச்சடங்குகளை செய்து கொள்வதற்கும், அனைத்து சமய மக்களுக்கும் அவரவரது வழிபாட்டு உரிமைகளை முழுமையாக வழங்கும் வகையிலும்தான் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டங்களை இந்த நாடு வழங்கியுள்ளது. அதுபோல இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் என்று ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மத சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர். இந்தத் தனியார் சட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சீக்கியர் தனது கையில் குறுவாள் வைத்துக் கொண்டு செல்லலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை எந்த காவல்துறையும் தடுக்க முடியாது. அதே குறுவாளை ஒரு இந்துவோ, அல்லது ஒரு முஸ்லிமோ கொண்டு செல்ல முடியாது. அதைப்போல கூட்டுக்குடும்பமாக வாழக்கூடிய இந்துக் குடும்பங்களுக்கு வரி விலக்கு வழங்கும் சலுகையை இந்துக்களுக்கு மட்டும் நமது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது. ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு கிறித்தவரோ இது போன்று கூட்டுக்குடும்பமாக இருந்து கொண்டு வரி விலக்குக்கோர முடியாது. இப்படி இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்னபிற மதத்தினருக்கும் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தனித்தனி சலுகைகளையும், உரிமைகளையும் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது போல முஸ்லிம்களுக்கும் சில உரிமைகளை இஸ்லாத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது என்ற அடிப்படையான விஷயம் இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியுமா? தெரியாதா?
இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்துக் கொள்கின்றனர். சொத்துரிமை விஷயத்தில் திருக்குர்-ஆன் காட்டும் வழிகாட்டுதல் அடிப்படையில் எங்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுகின்றது. அதுபோல விவாகரத்து விஷயத்திலும் இஸ்லாமியர்கள் தங்களது ஜமாஅத்துகளுக்குள் வைத்து நாங்கள் எங்களது விவாகரத்து முறைகளை முடித்துக் கொள்கின்றோம். இதிலெல்லாம் எப்படி காவல்துறை தலையிட அதிகாரமில்லையோ அதைப்போலத்தான் ஒரு பெண்ணுக்கு எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இஸ்லாமிய மார்க்கம் எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் பருவமடைந்த பெண் திருமணம் முடித்துக் கொள்ள எங்களது மார்க்கம் அனுமதி வழங்குவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 251வது விதியில் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விதியின் அடிப்படையில்தான் ஒரு பெண் பருவமடைந்து விட்டாலே இஸ்லாமியர்கள் 18வயது பூர்த்தியாகின்றதா? என்ற சட்டத்தையெல்லாம் பார்க்காமல் எங்களுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் திருமணம் செய்து வைக்கின்றோம். அதைத்தடுக்க நீங்கள் யார்? இப்படி எங்களது ஷரீஅத் விஷயத்தில் தலையிட்டு அடாவடித்தனம் செய்து முஸ்லிம்களை மிரட்டிப்பார்த்தால் நாடு தழுவிய போராட்டமாக இதை மாற்றி மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்.
இது குழந்தை திருமணம் என்று கூறி இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளீர்களே! ஒரு பெண் பருவமடைந்துவிட்டால் அவளை குழந்தை என்று எவனாவது கூறுவானா? இதிலிருந்தே உங்களது அறியாமை வெளிப்படுகின்றதா? இல்லையா?. அவள் பருவமடைந்ததால் தானே குழந்தை பெற்றெடுக்கின்றாள். இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
உங்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும் தெரியவில்லை. உலக நடப்பும் தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதானே டெல்லி உயர்நீதி மன்றம் முஸ்லிம் பெண்கள் 15 வயதிலேயே தான் விரும்பியவரை மணம் முடிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. உங்களுக்கு ஒரு சட்டமும் தெரியாதா?. தயவுசெய்து அதிகாரியாக பதவிக்கு வருபவர்கள் சட்டத்தைப் படித்துவிட்டு பதவியேற்க வாருங்கள்” என்றும், இந்த அயோக்கியத்தனத்தைச் செய்த பெரம்பலூர் மாவட்ட கலக்டர் தரேஸ் அஹமதுவை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களை மிரட்டிய டி.எஸ்.பி சிவக்குமாரையும் தனது கணடன உரையில் அவர் கண்டித்து தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.
இவரது உரை மழுமட்டையான அதிகாரிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன என்பது குறித்து பாடம் நடத்தியதைப் போல அமைந்தது.
தாவூத் கைசர் அவர்கள் தனது கண்டன உரையில், இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து சமய மக்களையும் கருத்தில் கொண்டுதான் சட்டங்களை இயற்றியுள்ளார்கள். அவரவர் தங்களது மதச்சடங்குகளை செய்து கொள்வதற்கும், அனைத்து சமய மக்களுக்கும் அவரவரது வழிபாட்டு உரிமைகளை முழுமையாக வழங்கும் வகையிலும்தான் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கென்று தனிச்சட்டங்களை இந்த நாடு வழங்கியுள்ளது. அதுபோல இந்துக்களுக்கும், கிறித்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் என்று ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் மத சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர். இந்தத் தனியார் சட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சீக்கியர் தனது கையில் குறுவாள் வைத்துக் கொண்டு செல்லலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை எந்த காவல்துறையும் தடுக்க முடியாது. அதே குறுவாளை ஒரு இந்துவோ, அல்லது ஒரு முஸ்லிமோ கொண்டு செல்ல முடியாது. அதைப்போல கூட்டுக்குடும்பமாக வாழக்கூடிய இந்துக் குடும்பங்களுக்கு வரி விலக்கு வழங்கும் சலுகையை இந்துக்களுக்கு மட்டும் நமது அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது. ஒரு முஸ்லிமோ அல்லது ஒரு கிறித்தவரோ இது போன்று கூட்டுக்குடும்பமாக இருந்து கொண்டு வரி விலக்குக்கோர முடியாது. இப்படி இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், இன்னபிற மதத்தினருக்கும் தனியார் சட்டத்தின் அடிப்படையில் தனித்தனி சலுகைகளையும், உரிமைகளையும் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது போல முஸ்லிம்களுக்கும் சில உரிமைகளை இஸ்லாத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ளது என்ற அடிப்படையான விஷயம் இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியுமா? தெரியாதா?
இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்துக் கொள்கின்றனர். சொத்துரிமை விஷயத்தில் திருக்குர்-ஆன் காட்டும் வழிகாட்டுதல் அடிப்படையில் எங்களுக்கு சொத்துரிமை வழங்கப்படுகின்றது. அதுபோல விவாகரத்து விஷயத்திலும் இஸ்லாமியர்கள் தங்களது ஜமாஅத்துகளுக்குள் வைத்து நாங்கள் எங்களது விவாகரத்து முறைகளை முடித்துக் கொள்கின்றோம். இதிலெல்லாம் எப்படி காவல்துறை தலையிட அதிகாரமில்லையோ அதைப்போலத்தான் ஒரு பெண்ணுக்கு எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இஸ்லாமிய மார்க்கம் எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் பருவமடைந்த பெண் திருமணம் முடித்துக் கொள்ள எங்களது மார்க்கம் அனுமதி வழங்குவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 251வது விதியில் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விதியின் அடிப்படையில்தான் ஒரு பெண் பருவமடைந்து விட்டாலே இஸ்லாமியர்கள் 18வயது பூர்த்தியாகின்றதா? என்ற சட்டத்தையெல்லாம் பார்க்காமல் எங்களுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் திருமணம் செய்து வைக்கின்றோம். அதைத்தடுக்க நீங்கள் யார்? இப்படி எங்களது ஷரீஅத் விஷயத்தில் தலையிட்டு அடாவடித்தனம் செய்து முஸ்லிம்களை மிரட்டிப்பார்த்தால் நாடு தழுவிய போராட்டமாக இதை மாற்றி மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும்.
இது குழந்தை திருமணம் என்று கூறி இந்தத் திருமணத்தை நிறுத்தியுள்ளீர்களே! ஒரு பெண் பருவமடைந்துவிட்டால் அவளை குழந்தை என்று எவனாவது கூறுவானா? இதிலிருந்தே உங்களது அறியாமை வெளிப்படுகின்றதா? இல்லையா?. அவள் பருவமடைந்ததால் தானே குழந்தை பெற்றெடுக்கின்றாள். இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
உங்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும் தெரியவில்லை. உலக நடப்பும் தெரியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதானே டெல்லி உயர்நீதி மன்றம் முஸ்லிம் பெண்கள் 15 வயதிலேயே தான் விரும்பியவரை மணம் முடிக்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. உங்களுக்கு ஒரு சட்டமும் தெரியாதா?. தயவுசெய்து அதிகாரியாக பதவிக்கு வருபவர்கள் சட்டத்தைப் படித்துவிட்டு பதவியேற்க வாருங்கள்” என்றும், இந்த அயோக்கியத்தனத்தைச் செய்த பெரம்பலூர் மாவட்ட கலக்டர் தரேஸ் அஹமதுவை உடனடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார். முஸ்லிம்களை மிரட்டிய டி.எஸ்.பி சிவக்குமாரையும் தனது கணடன உரையில் அவர் கண்டித்து தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.
இவரது உரை மழுமட்டையான அதிகாரிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்ன என்பது குறித்து பாடம் நடத்தியதைப் போல அமைந்தது.
போராட்டத்தின் ஹைலைட் :
இறுதியாக கண்டன உரை முடிந்தவுடன் வந்திருந்த மக்கள் அனைவரையும் கைது செய்வார்கள் என்று நாம் நினைத்தால் காவல்துறையினர் நமது நிர்வாகிகளிடத்தில் வந்து, “தயவுசெய்து அனைவரும் கலைந்து சென்று விடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதுதான் போராட்டத்தின் ஹைலைட்.
இந்தப் போராட்டம் நடத்த அனுமதி வழங்காமல், காவல்துறை இதற்கு தடைபோட்டபோதும், தடைகளைத் தகர்த்தெறிந்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்திய போதும், வந்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்தும், போராட்டத்தின் நியாயத்தைப் பார்த்தும், நாம்தான் சட்டம் தெரியாமல் இப்படி செய்துவிட்டோம் என்பதையும் உணர்ந்த காவல்துறை நமது சகோதர, சகோதரிகளை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டதோடு போராட்டம் நிறைவுற்றது.
இனிமேலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்யும் இந்த அத்துமீறல் வேறு ஏதாவது பகுதியில் நடப்பதாகத் தெரிந்தால் தமிழகத்தையே புரட்டிப்போடும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் நிலையை இங்கு ஏற்படுத்திவிட வேண்டாம் என்று எச்சரித்ததோடு, இந்த போரட்டமானது ஒரு யுரேஷா பானுவுக்காக நடத்தப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்காகவும் அவர்களது மத சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும், அவர்களது மத உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் என்றும் நமது நிர்வாகிகள் உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கூறினர்.
பெரம்பலூரில் இதுவரைக்கும் அதிகாரவர்க்கத்தை கண்டித்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை யாரும் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியதில்லை என்பதால் மிகப்பெரும் பரபரப்பு நிலவியது. அந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தை மறுநாள் மிக முக்கியத்துவப்படுத்தி அனைத்து நாளிதழ்களும் செய்தி வெளியிட்டிருந்தன. குறிப்பாக நமது செய்திகளை முற்றிலுமாக புறக்கணிக்கும் தினத்தந்தி கலர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இறுதியாக கண்டன உரை முடிந்தவுடன் வந்திருந்த மக்கள் அனைவரையும் கைது செய்வார்கள் என்று நாம் நினைத்தால் காவல்துறையினர் நமது நிர்வாகிகளிடத்தில் வந்து, “தயவுசெய்து அனைவரும் கலைந்து சென்று விடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதுதான் போராட்டத்தின் ஹைலைட்.
இந்தப் போராட்டம் நடத்த அனுமதி வழங்காமல், காவல்துறை இதற்கு தடைபோட்டபோதும், தடைகளைத் தகர்த்தெறிந்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்திய போதும், வந்திருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்தும், போராட்டத்தின் நியாயத்தைப் பார்த்தும், நாம்தான் சட்டம் தெரியாமல் இப்படி செய்துவிட்டோம் என்பதையும் உணர்ந்த காவல்துறை நமது சகோதர, சகோதரிகளை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டதோடு போராட்டம் நிறைவுற்றது.
இனிமேலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்யும் இந்த அத்துமீறல் வேறு ஏதாவது பகுதியில் நடப்பதாகத் தெரிந்தால் தமிழகத்தையே புரட்டிப்போடும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் நிலையை இங்கு ஏற்படுத்திவிட வேண்டாம் என்று எச்சரித்ததோடு, இந்த போரட்டமானது ஒரு யுரேஷா பானுவுக்காக நடத்தப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்காகவும் அவர்களது மத சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும், அவர்களது மத உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டம் என்றும் நமது நிர்வாகிகள் உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் கூறினர்.
பெரம்பலூரில் இதுவரைக்கும் அதிகாரவர்க்கத்தை கண்டித்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை யாரும் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியதில்லை என்பதால் மிகப்பெரும் பரபரப்பு நிலவியது. அந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தை மறுநாள் மிக முக்கியத்துவப்படுத்தி அனைத்து நாளிதழ்களும் செய்தி வெளியிட்டிருந்தன. குறிப்பாக நமது செய்திகளை முற்றிலுமாக புறக்கணிக்கும் தினத்தந்தி கலர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
No comments:
Post a Comment